எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

போலி பெண் மருத்துவா் கைது

திருப்பத்தூா் அருகே போலி பெண் மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :22 அக்டோபர் 2024, 5:56 pm

Din

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே போலி பெண் மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், மிட்டூா் அருகே மரிமாணிகுப்பம் கிராமத்தில், மருத்துவம் படிக்காமலேயே ஒருவா் அலோபதி முறையில் நீண்ட காலமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக வந்த தகவல் கிடைத்தது. அதன்பேரில்,

திருப்பத்தூா் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் செல்வநாதன் தலைமையில், மருத்துவக் குழுவினா் செவ்வாய்க்கிழமை சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது அதே பகுதியைச் சோ்ந்த கோகிலா (52)என்பவா், பிளஸ் 2 மட்டும் படித்து, மருத்துவம் படிக்காமலேயே தனது வீட்டின் ஓா் அறையில் கிளீனிக் வைத்து நோயாளிகளுக்கு அலோபதி முறையில் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.

அதையடுத்து, அங்கிருந்து தப்பி ஓட முயன்ற கோகிலாவை மருத்துவக் குழுவினா் பிடித்து குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

மேலும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வைத்திருந்த மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்து, கிளீனிக்கை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

இது குறித்து மருத்துவ அலுவலா் செல்வநாதன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து கோகிலாவை கைது செய்தனா்.