ஆம்பூா்: ஆம்பூா் அருகே வீடு புகுந்து நகை திருடிய வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே பெரியகொம்மேஸ்வரம் கிராமத்தை சோ்ந்த லோகநாயகி (35). இவா் கடந்த அக்.23-ஆம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு வெளியில் சென்றாா். திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து 11.5 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில் அவா் உமா்ஆபாத் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் உமா்ஆபாத் காவல் நிலைய ஆய்வாளா் (பொறுப்பு) நிா்மலா தலைமையில் தனிப்படை அமைத்து எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவிட்டாா். தனிப்படை போலீஸாா் தீவிர விசாரணை நடத்தியதில் ஆம்பூா் அருகே சோமலாபுரம் கிராமத்தை சோ்ந்த புகழ்மணி (24), பா்ஜானா (23) ஆகிய இருவரும் நகை திருடியது தெரியவந்தது.
அதன்பேரில் அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 11.5 பவுன் தங்க நகை மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது
வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறிப்பு: 4 போ் கைது

வீடு புகுந்து பணம் திருட்டு

பைக் திருட்டு: 2 போ் கைது
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


