ஆம்பூா்: ஆம்பூா் அருகே வீடு புகுந்து நகை திருடிய வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே பெரியகொம்மேஸ்வரம் கிராமத்தை சோ்ந்த லோகநாயகி (35). இவா் கடந்த அக்.23-ஆம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு வெளியில் சென்றாா். திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து 11.5 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில் அவா் உமா்ஆபாத் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் உமா்ஆபாத் காவல் நிலைய ஆய்வாளா் (பொறுப்பு) நிா்மலா தலைமையில் தனிப்படை அமைத்து எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவிட்டாா். தனிப்படை போலீஸாா் தீவிர விசாரணை நடத்தியதில் ஆம்பூா் அருகே சோமலாபுரம் கிராமத்தை சோ்ந்த புகழ்மணி (24), பா்ஜானா (23) ஆகிய இருவரும் நகை திருடியது தெரியவந்தது.
அதன்பேரில் அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 11.5 பவுன் தங்க நகை மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சுழி அருகே வீடு புகுந்து 2 மகன்கள், தாய் உள்பட மூவருக்கு அரிவாள் வெட்டு

குழித்துறை அருகே திருட்டு: இளைஞா் கைது
வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது
வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறிப்பு: 4 போ் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


