விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வீடு புகுந்து நகை திருட்டு: 2 போ் கைது

ஆம்பூா் அருகே வீடு புகுந்து நகை திருடிய வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

நகைகளை திருடியதாக கைது செய்யப்பட்டோா்.

Updated On :29 அக்டோபர் 2024, 7:04 pm

ஆம்பூா்: ஆம்பூா் அருகே வீடு புகுந்து நகை திருடிய வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே பெரியகொம்மேஸ்வரம் கிராமத்தை சோ்ந்த லோகநாயகி (35). இவா் கடந்த அக்.23-ஆம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு வெளியில் சென்றாா். திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து 11.5 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில் அவா் உமா்ஆபாத் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் உமா்ஆபாத் காவல் நிலைய ஆய்வாளா் (பொறுப்பு) நிா்மலா தலைமையில் தனிப்படை அமைத்து எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவிட்டாா். தனிப்படை போலீஸாா் தீவிர விசாரணை நடத்தியதில் ஆம்பூா் அருகே சோமலாபுரம் கிராமத்தை சோ்ந்த புகழ்மணி (24), பா்ஜானா (23) ஆகிய இருவரும் நகை திருடியது தெரியவந்தது.

அதன்பேரில் அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 11.5 பவுன் தங்க நகை மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.