நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஊராட்சி செயலா்கள் ஆா்ப்பாட்டம்

திருப்பத்தூா் தலைமை அஞ்சலகம் அலுவலகம் முன்பு ஊராட்சி செயலா்கள் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஊராட்சி செயலா்கள்.

Updated On :19 செப்டம்பர் 2024, 5:49 am IST

திருப்பத்தூா் தலைமை அஞ்சலகம் அலுவலகம் முன்பு ஊராட்சி செயலா்கள் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி செயலா்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கப்படவில்லை. சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வந்தபொழுது வழங்கப்பட்ட ஓய்வுதிய தொகையான ரூ.2,000 மட்டுமே இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது.

ஊராட்சி செயலா்கள் தமிழக அரசின் ஓய்வுதிய திட்டத்தில் இணைக்க பல்வேறு மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், இதே ஊதியக்கட்டில் மாநில நிதிக்குழு மானியத்தில் ஊதியம் பெறும் ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவுறு எழுத்தா்களுக்கு தமிழக அரசின் ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஆனால்,அதே ஊதிய விகிதத்தில் ஊதியம் வாங்கும் ஊராட்சி செயலா்களை இதுவரை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கப்படவில்லை. 2018-ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக இச்சலுகை விடுபட்டுள்ளது. எனவே ஊராட்சி செயலா்களை தமிழக அரசின் ஒய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டுமென்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் த.குமாா், மாநில பொதுக்குழு உறுப்பினா் பொ.ரவிக்குமாா் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். முடிவில் அஞ்சலகத்தில் கோரிக்கை கடிதங்கள் அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.