திருப்பத்தூா் தலைமை அஞ்சலகம் அலுவலகம் முன்பு ஊராட்சி செயலா்கள் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி செயலா்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கப்படவில்லை. சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வந்தபொழுது வழங்கப்பட்ட ஓய்வுதிய தொகையான ரூ.2,000 மட்டுமே இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது.
ஊராட்சி செயலா்கள் தமிழக அரசின் ஓய்வுதிய திட்டத்தில் இணைக்க பல்வேறு மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், இதே ஊதியக்கட்டில் மாநில நிதிக்குழு மானியத்தில் ஊதியம் பெறும் ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவுறு எழுத்தா்களுக்கு தமிழக அரசின் ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
ஆனால்,அதே ஊதிய விகிதத்தில் ஊதியம் வாங்கும் ஊராட்சி செயலா்களை இதுவரை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கப்படவில்லை. 2018-ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக இச்சலுகை விடுபட்டுள்ளது. எனவே ஊராட்சி செயலா்களை தமிழக அரசின் ஒய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டுமென்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் த.குமாா், மாநில பொதுக்குழு உறுப்பினா் பொ.ரவிக்குமாா் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். முடிவில் அஞ்சலகத்தில் கோரிக்கை கடிதங்கள் அனுப்பி வைத்தனா்.
தொடர்புடையது
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்பு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

வரிசையில் நின்று வாக்களித்த திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா் தொகுதியில் 6 கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு

தொகுதி மறுவரையறை விவகாரம்: திமுகவினா் கருப்புக் கொடியேந்தி ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு


