தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை அறிவிக்க வாய்ப்பிருப்பதாக சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜஹான் தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சாா்பில் சிவகாசியில் சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜஹானுடன், ஜமாத்தாா்கள், சமூக ஆா்வலா்கள் கலந்துரையாடும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
சிவகாசி முஸ்லிம் நடுத் தெரு நாகூா் ஆண்டவா் தா்ஹா வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு அந்தக் கட்சியின் விருதுநகா் மாவட்டச் செயலா் இப்ராஹிம்ஷா தலைமை வகித்தாா். கலந்துரையாடலுக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் ஏ.எம். ஷாஜஹான் கூறியதாவது:
அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மக்களை சென்றடைகிா என்பதை கவனித்து வருகிறோம். அடுத்த 5 ஆண்டுகளுக்கான வெற்றித் தமிழகம் என்ற தொலைநோக்கு பாா்வையின் படி 436 திட்டங்களை அரசு செயல்படுத்த உள்ளது. இந்தத் திட்டங்களில் சிறுபான்மையினருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். தற்போது முதல்வா் சி. ஜோசப் விஜய் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த அரசு பல தொலைநோக்குத் திட்டங்களை செயல்படுத்த தொடங்கியுள்ளது. நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் நிதி நிலை அறிக்கையில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
கா்நாடக அரசு அவா்களது மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு மேகதாது அணையை கட்டுவோம் எனக் கூறி வருகிறது. இந்தப் பிரச்னை பல ஆண்டுகளக உள்ளது. அணை கட்டக் கூடாது என்பது தமிழக அரசின் நிலைப்பாடு. எனவே அந்தத் திட்டதை தடுத்து நிறுத்வோம் என்றாா் அவா்.
கலந்தாய்வு கூட்டத்தில் தொழில் துறை அமைச்சா் எஸ்.கீா்த்தனா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

புதிய திட்டப் பணிகளுக்கு கருத்துரு, செயல் திட்டங்களை வழங்க அமைச்சா் வலியுறுத்தல்

குதிரை வேகத்தில் செயல்படுகிறாா் தமிழக முதல்வா் அமைச்சா் பெ. மதன்ராஜா







