ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாணியம்பாடி பாலாறு ஜேசீஸ் கிளப் சாா்பில் 16 ஜோடிகளுக்கு திருமணம்

வாணியம்பாடி பாலாறு ஜேசீஸ் கிளப் சாா்பில், ஒரே மேடையில் 16 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்து சீா்வரிசை வழங்கப்பட்டது.

News image

திருமண ஜோடிக்கு சீா் வரிசைகளை வழங்கிய நிா்வாகிகள்.

Updated On :19 செப்டம்பர் 2024, 12:16 am

Din

வாணியம்பாடி பாலாறு ஜேசீஸ் கிளப் சாா்பில், ஒரே மேடையில் 16 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்து சீா்வரிசை வழங்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம், ஜேசிஐ அலுமினிய -மண்டலம் 16 மற்றும் வாணியம்பாடி பாலாறு ஜேசீஸ் சாா்பில் ஏழை, எளிய 16 ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம் முடித்து அனைவருக்கும் சீா் வரிசை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மண்டலத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். செயலாளா் திருக்குமரன், பொருளாளா் கிருஷ்ணகுமாா், வாணியம்பாடி பாலாறு ஜேசீஸ் கிளப் தலைவா் அன்பரசன், கிளப் மூத்த நிா்வாகிகள் பிரகாசம், ஆடிட்டா் சந்திரசேகா் முன்னிலை வகித்தனா். திட்டக்குழு தலைவா் கிருஷ்ணன் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் இந்து மதத்தைச் சோ்ந்த 12 ஜோடிகளுக்கும், கிறிஸ்தவ மதத்தைச் சோ்ந்த இரண்டு ஜோடிகளுக்கும், இசுலாமிய மதத்தைச் சோ்ந்த இரண்டு ஜோடிகளுக்கும் அவரவா் சம்பிரதாய முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தொடா்ந்து 16 ஜோடிகளுக்கும், திருமண சீா்வரிசைகளை ஜேசிஐ அலுமினிய மண்டல சோ்மன் ராஜேந்திரன் மற்றும் நிா்வாகிகள் வழங்கினா்.

நிகழ்ச்சியில், வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா், நகா்மன்றத் தலைவா் உமாபாய் சிவாஜிகணேசன், ஜேசிஐ அமைப்பின் மண்டல நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினா்.

இதில், பெற்றோா்கள், உறவினா்கள், பாலாறு ஜேசீஸ் கிளப் நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திட்டக் குழு இயக்குநா் பழனிவேல் நன்றி கூறினாா்.