மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பள்ளி மாணவியின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து மிரட்டல்: 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது!

வாணியம்பாடி அருகே 9 ஆம் வகுப்பு மாணவியின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து நண்பர்களுக்கு அனுப்பி, மிரட்டி வந்த 5 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

News image

கைது செய்யப்பட்டவர்கள்.

Updated On :10 ஏப்ரல் 2025, 1:17 pm IST

வாணியம்பாடி அருகே 9 ஆம் வகுப்பு மாணவியின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து நண்பர்களுக்கு அனுப்பி மிரட்டி வந்த இரண்டு சிறுவர்கள் உள்பட 5 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி, முகநூல் வலைதளத்தில் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் கலையரசன் என்பவரை நண்பராக சேர்த்துக் கொண்டுள்ளார்.

பின்னர் மாணவியிடம், உன்னுடைய புகைப்படத்தை நிர்வாணமாக மார்ஃபிங் செய்து உனது பெற்றோருக்கு அனுப்பி வைப்பேன் என பல்வேறு வகையில் மிரட்டி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் மாணவியின் போட்டோவை மார்ஃபிங் செய்து அவரது நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை அறிந்த மாணவி அழுதுகொண்டு பெற்றோரிடம் நடந்ததைத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பெற்றோர், ஆலங்காயம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் போட்டோவை மார்ஃபிங் செயது மிரட்டி வந்த கலையரசனை கைது செய்தனர்.

மேலும் அவரது நண்பர்களான பூங்குளம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், சந்தோஷ் மற்றும் சிறுவர்கள் 2 பேர் என 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் சிறுவர்கள் 2 பேரை சென்னையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.