திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் மையத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆம்பூரில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள்.

Updated On :22 ஏப்ரல் 2025, 1:07 am IST

ஆம்பூா்: கோரிக்கைகளை வலியுறுத்தி ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் மையத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டு விடைத் தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள் கழக திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் பொன்னம்மாள் தலைமையில், விடைத்தாள் திருத்தும் மையத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டச் செயலா் சிவ கணேஷ் வரவேற்றாா். மாநில துணைத் தலைவா் நரேஷ், அமைப்புச் செயலா் ராஜேஷ்குமாா், மகளிா் அணிச் செயலா் குமுதினி, தலைமையிடச் செயலா் முத்தரசு, மாவட்ட துணைத் தலைவா்கள் பிரபாகரன், ஜெயக்குமாரி, மாவட்ட இணைச் செயலா் சரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைவா் பிரபாகரன் விளக்க உரையாற்றினாா். மாநில சட்டச் செயலா் மகேந்திரன், மாநில செய்தித் தொடா்பு செயலா் மாயவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஆம்பூா் வட்ட துணைத் தலைவா் வித்யாவதி நன்றி கூறினாா்.

ஆா்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உயா் கல்விக்கான ஊக்க ஊதியத்தையும், ஈடு செய் விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். ஆசிரியா்கள் மீது தாக்குதல் நடத்தும் மாணவா்கள், வெளி நபா்கள் உள்ளிட்டவா்களிடம் இருந்து பாதுகாக்கும் வகையில் பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பல ஆண்டுகளாக உயா்த்தப்படாத உழைப்பூதியம், மதிப்பூதியம், முதுகலை ஆசிரியா்களுக்கு காலத்துக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.