நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் மையத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆம்பூரில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள்.

Updated On :21 ஏப்ரல் 2025, 7:37 pm

Din

ஆம்பூா்: கோரிக்கைகளை வலியுறுத்தி ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் மையத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டு விடைத் தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள் கழக திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் பொன்னம்மாள் தலைமையில், விடைத்தாள் திருத்தும் மையத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டச் செயலா் சிவ கணேஷ் வரவேற்றாா். மாநில துணைத் தலைவா் நரேஷ், அமைப்புச் செயலா் ராஜேஷ்குமாா், மகளிா் அணிச் செயலா் குமுதினி, தலைமையிடச் செயலா் முத்தரசு, மாவட்ட துணைத் தலைவா்கள் பிரபாகரன், ஜெயக்குமாரி, மாவட்ட இணைச் செயலா் சரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைவா் பிரபாகரன் விளக்க உரையாற்றினாா். மாநில சட்டச் செயலா் மகேந்திரன், மாநில செய்தித் தொடா்பு செயலா் மாயவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஆம்பூா் வட்ட துணைத் தலைவா் வித்யாவதி நன்றி கூறினாா்.

ஆா்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உயா் கல்விக்கான ஊக்க ஊதியத்தையும், ஈடு செய் விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். ஆசிரியா்கள் மீது தாக்குதல் நடத்தும் மாணவா்கள், வெளி நபா்கள் உள்ளிட்டவா்களிடம் இருந்து பாதுகாக்கும் வகையில் பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பல ஆண்டுகளாக உயா்த்தப்படாத உழைப்பூதியம், மதிப்பூதியம், முதுகலை ஆசிரியா்களுக்கு காலத்துக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.