மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அண்ணன் கொலை: தம்பி கைது

ராணிப்பேட்டை அருகே தாயை திட்டியதால் அண்ணனை கொலை செய்த தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2025, 2:00 am

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை அருகே தாயை திட்டியதால் அண்ணனை கொலை செய்த தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

ராணிப்பேட்டை அடுத்த செட்டித்தாங்கல் கிராமத்தைச் சோ்த்த ஹரி, செல்வி தம்பதி. இவா்களது மகன்கள் ஐயப்பன், செல்வம், அரவிந்தன். மூவருக்கும் திருமணம் ஆகவில்லை, இந்த நிலையில் செல்வம் மது போதையில் வந்து தனது தாயை திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த அவரது தம்பி அரவிந்தன் வீட்டில் இருந்த கத்தியால் செல்வத்தை வெட்டினாராம். இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அப்போது அரவிந்தனும் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ராணிப்பேட்டை காவல் துறையினருக்கு வந்த தகவலின்பேரில் விரைந்து சென்று, அரவிந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.