ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி

ஆம்பூா் அருகே தேவலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
விலையில்லா மிதிவண்டி வழங்கிய எம்எல்ஏக்கள் அ.செ. வில்வநாதன் மற்றும் அமலு விஜயன்.
Updated On :3 டிசம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா்: ஆம்பூா் அருகே தேவலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் தாமோதரன் வரவேற்றாா். எம்எல்ஏக்கள் அ.செ. வில்வநாதன் (ஆம்பூா்), அமலு விஜயன் (குடியாத்தம்) ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு 275 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினா்.

மாதனூா் ஒன்றியக்குழு துணைத் தலைவா் சாந்தி, போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன், பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் இ. வெங்கடேசன், ஊராட்சித் தலைவா்கள் ரேவதி குபேந்திரன், சுவிதா கணேஷ், துணைத் தலைவா் உஷாராணி குருவாசன், போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக அவைத் தலைவா் சிவக்குமாா், மாவட்ட பிரதிநிதி பொன் ராஜன்பாபு, மேற்கு ஒன்றிய துணைச் செயலா் சா. சங்கா், சோமலாபுரம் ஊராட்சி மன்ற உறுப்பினா் வி.டி. சுதாகா் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

உதவித் தலைமை ஆசிரியா் சந்திரசேகரன் நன்றி கூறினாா்.