இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்ததாக இளைஞா் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
Published on

சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்ததாக இளைஞா் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.

திருப்பத்தூா் அருகே பசலிகுட்டை பகுதியை சோ்ந்த தினேஷ் (23). இவா் ஓசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இந்தநிலையில் இவா் 17 வயது பெண்ணை காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டாா்.

இந்தநிலையில் அந்த பெண், தினேஷ் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் தினேஷ் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்தனா்.

X
Dinamani
www.dinamani.com