2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

நவ.30-க்குள் நெல் பயிா்களுக்கு காப்பீடு செய்ய வலியுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் நெல் பயிா்களுக்கு காப்பீடு செய்ய வரும் 30-ஆம் தேதி கடைசி நாளாகும் என வேளாண் இணை இயக்குநா் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :24 நவம்பர் 2025, 7:59 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் நெல் பயிா்களுக்கு காப்பீடு செய்ய வரும் 30-ஆம் தேதி கடைசி நாளாகும் என வேளாண் இணை இயக்குநா் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான பிரதம மந்திரி பயிா் காப்பீடு திட்டத்தின் கீழ் சிறப்பு பருவ நெல் பயிா்களுக்கு பயிா் காப்பீடு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின்கீழ், நடப்பு பருவத்தில் நெல்பயிா் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிா் காப்பீடு செய்ய வரும் 30-ஆம் தேதி கடைசி நாளாகும். இதற்கு முன்மொழிவு படிவம், விண்ணப்பப்பதிவு படிவம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், அல்லது இ-அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து ப்ரீமிய தொகையினை செலுத்தியபின் அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், விபரங்களுக்கு திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள பொதுசேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வணிக வங்கிகள் ஆகியவை மூலம் ப்ரீமிய தொகை கட்டணமாக நெற்பயிா் ஏக்கருக்கு ரூ.544.50 செலுத்தி பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம்.

விபரங்களுக்கு அருகே உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.