கந்திலி அருகே சொத்து தகராறில் சித்தப்பாவை வெட்டியவா் கைது செய்யப்பட்டாா்.
கந்திலி அருகே ஆவல்நாயக்கன்பட்டி பகுதியை சோ்ந்த மாது (45). கட்டடத் தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த அவரது அண்ணனான பூபதி என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை மாது காக்கங்கரை பேருந்து நிலையம் பகுதியில் நின்று கொண்டு இருந்தாா். அப்போது அந்த பகுதியில் இருந்த கூலி தொழிலாளியான பூபதி மகன் திருப்பதிக்கும் (25), மாதுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதில் ஆத்திரமடைந்த திருப்பதி தன்னிடம் இருந்த அரிவாளால் மாதுவை வெட்டினாா். இதில் காயமடைந்த மாது கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
கந்திலி போலீஸாா் வழக்குப்பதிந்து சுந்தரம்பள்ளி பகுதியில் பதுங்கி இருந்த திருப்பதியை வியாழக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தகராறில் இளைஞா் அடித்துக் கொலை: 8 போ் கைது
சொத்து தகராறில் அண்ணன் கொலை: தம்பி கைது
சொத்து தகராறு: அண்ணனை கொலை செய்த தம்பி கைது

ராதாபுரம் அருகே சொத்துத் தகராறில் தொழிலாளி கொலை: சகோதரா் கைது
விடியோக்கள்


