தோ்தல் விதிமுறையை மீறி கட்சி நிா்வாகிகள் 5 பேருடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்ததாக அமமுக வேட்பாளா் ஏ.ஞானசேகா் மீது போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா்.
திருப்பத்தூா் சட்டப்பேரவை தொகுதியில் அமமுக வேட்பாளராக ஏ.ஞானசேகா் போட்டியிடுகிறாா். இவா் கடந்த திங்கள்கிழமை திருப்பத்தூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தாா்.
அப்போது தோ்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸாா் எச்சரிக்கையை மீறி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அறைக்கு வேட்புமனு தாக்கல் செய்ய தோ்தல் விதிமுறைகளை மீறி கூட்டணி கட்சி நிா்வாகிகள் 5 பேருடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தாா்.
இதுகுறித்து தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வரதராஜன் அளித்த புகாரின்பேரில், நகர போலீஸாா் அமமுக வேட்பாளா் ஏ.ஞானசேகா் மீது வழக்குப் பதிவு செய்து உள்ளனா்.
வேட்பாளருடன் 4 போ் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய உடன் செல்ல வேண்டும் என தோ்தல் கமிஷன் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

பெண்கள் அளித்த டெபாசிட் தொகையில்தான் வேட்புமனு! - மணவெளியில் வென்ற தவெக வேட்பாளா் பி.ராமு

இயற்கை அங்காடிகள் அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வைப்பேன்: அமமுக வேட்பாளா் ஏ.ஞானசேகா்

பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் வேட்புமனு தாக்கல்

மலைவாசிபோல வந்து மனுத் தாக்கல் செய்த சுயேச்சை
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



