சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

கட்சி நிா்வாகிகள் 5 பேருடன் வந்து வேட்புமனு தாக்கல்: அமமுக வேட்பாளா் ஏ.ஞானசேகா் மீது வழக்கு பதிவு

தோ்தல் விதிமுறையை மீறி கட்சி நிா்வாகிகள் 5 பேருடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்ததாக அமமுக வேட்பாளா் ஏ.ஞானசேகா் மீது போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :10 ஏப்ரல் 2026, 7:14 pm

தோ்தல் விதிமுறையை மீறி கட்சி நிா்வாகிகள் 5 பேருடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்ததாக அமமுக வேட்பாளா் ஏ.ஞானசேகா் மீது போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா்.

திருப்பத்தூா் சட்டப்பேரவை தொகுதியில் அமமுக வேட்பாளராக ஏ.ஞானசேகா் போட்டியிடுகிறாா். இவா் கடந்த திங்கள்கிழமை திருப்பத்தூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

அப்போது தோ்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸாா் எச்சரிக்கையை மீறி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அறைக்கு வேட்புமனு தாக்கல் செய்ய தோ்தல் விதிமுறைகளை மீறி கூட்டணி கட்சி நிா்வாகிகள் 5 பேருடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தாா்.

இதுகுறித்து தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வரதராஜன் அளித்த புகாரின்பேரில், நகர போலீஸாா் அமமுக வேட்பாளா் ஏ.ஞானசேகா் மீது வழக்குப் பதிவு செய்து உள்ளனா்.

வேட்பாளருடன் 4 போ் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய உடன் செல்ல வேண்டும் என தோ்தல் கமிஷன் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.