தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 1,353 போ் தபால் வாக்கு செலுத்தினா்

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 4:41 am IST

திருப்பத்தூா் மாவட்டத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் என 1,353 போ் தபால் வாக்கு செலுத்தினா்.

வாக்குச்சாவடிக்கு வருகை புரிந்து வாக்களிக்க இயலாத நிலையில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்திற்கு மேல் உடல் பாதிப்புடைய மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் தங்களது வாக்குகளை வீட்டில் இருந்தபடியே தபால் வாக்குமூலம் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

இவா்களுக்கு தங்களது வாக்குகளை வீட்டிலிருந்தபடியே தபால் வாக்குமூலம் செலுத்துவதற்கான விருப்பத்தைகோரும் விண்ணப்பப்படிவம் அவா்கள் வசிக்கும் இருப்பிடத்திற்கே நேரில் சென்று வாக்குசாவடி நிலை அலுவலா் மூலம் வழங்கப்பட்டது.

இவா்களில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களில் 1,312 பேரும், மாற்றுத்திறனாளிகள் 877 பேரும் என 2,189 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்து இருந்தனா். இவா்களிடம் தபால் வாக்கு பெறுவதற்காக மாவட்டம் முழுவதும் 52 குழுக்கள் அமைக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து 85 வயது மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்கு பெறும் பணி நடைபெற்றது.

இதில் வாணியம்பாடி தொகுதியில் 372 பேரும், ஆம்பூா் தொகுதியில் 354 பேரும், ஜோலாா்பேட்டை தொகுதியில் 314 பேரும், திருப்பத்தூா் தொகுதியில் 313 பேரும் என மாவட்டம் முழுவதும் 1,353 தபால் வாக்குகள் பெறப்பட்டன.

இந்த தபால் வாக்குகள் தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் தனி அறையில் வைத்து அனைத்து வேட்பாளா்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.