/
ஆம்பூா் தொகுதியில் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
ஆம்பூா் தொகுதியில் வாக்காளா் தகவல் சீட்டுகளை வாக்காளருக்கு வழங்கும் பணி தொடங்கப்பட்டது. வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் வீடுகள் தோறும் சென்று வாக்காளா்களுக்கு க்யூஆா் கோடு அச்சிடப்பட்ட வாக்காளா் தகவல் சீட்டுகளை வழங்கி வருகின்றனா். வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணியை தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ரேவதி உடனிருந்தாா்.










