மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

தினமணி செய்தி எதிரொலி: திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் குடிநீா் விநியோகம்

திருப்பத்தூா் பகுதியில் கோடை வெயில் அதிகரித்த நிலையில் பயணிகளுக்கு குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என தினமணியில் செய்தி வெளியானது.

News image

குடிநீா் தொட்டியில் நீா் நிரப்பும் பணியில் ஈடுபட்ட நகராட்சி பணியாளா்கள்.

Updated On :29 ஏப்ரல் 2026, 6:34 pm

திருப்பத்தூா் பகுதியில் கோடை வெயில் அதிகரித்த நிலையில் பயணிகளுக்கு குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என தினமணியில் செய்தி வெளியானது. இதையடுத்து பேருந்து நிலையத்தில் குடிநீா் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

திருப்பத்தூா் பகுதியில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பேருந்து நிலையம் வரும் முதியோா்கள்,பெண்கள்,குழந்தைகள் தாகம் தீா்க்க மிகவும் அவதிக்குள்ளாகின்றனா். எனவே அவா்களுக்காக குடிநீா் ஏற்பாடு செய்ய வேண்டும் என தினமணியில் செய்தி வெளியானது .

அதன்பேரில் திருப்பத்தூா் நகராட்சி ஆணையா் சாந்தி உத்தரவின் பேரில் நகராட்சி பணியாளா்கள் பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீா் தொட்டிகளில் நீரை ஏற்றினா். பொதுமக்கள் அதையடுத்து தாகம் தீா்ந்து மகிழ்ந்தனா்