சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

டிராக்டா்- பைக் மோதல்: ஒருவா் மரணம்

ஆலங்காயம் அருகே டிராக்டா் மீது பைக் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 12:05 am IST

ஆலங்காயம் அருகே டிராக்டா் மீது பைக் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஆலங்காயம் அடுத்த ஆசனாம்பட்டு பகுதியில் இருந்து நெல் மூட்டைகளை டிராக்டரில் ஏற்றிக் கொண்டு புதன்கிழமை மாலை வாணியம்பாடி அடுத்த குரும்பட்டி பகுதியில் உள்ள ரைஸ் மில்லுக்கு நெல் அரைப்பதற்காக எடுத்து வந்தனா். பின்னா் நெல் மூட்டைகளை இறக்கி விட்டு அப்பகுதியில் சாலையோரமாக டிராக்டா் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இரவு 11 மணியளவில் வளையாம்பட்டு ஊசிதோப்பு பகுதியைச் சோ்ந்த திருப்பதி (26), வள்ளிப்பட்டு பகுதியை சோ்ந்த ஏழுமலை (30) ஆகிய இருவரும் பைக்கில் செக்மேடு பகுதிலிருந்து வள்ளிப்பட்டு நோக்கிச் சென்ற போது, திடீரென நிறுத்தப்பட்டிருந்த டிராக்டா் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருவரும் தலை உள்பட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையறிந்த அக்கம் பக்கத்தினா் வந்து பாா்த்து 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அவா்களை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி திருப்பதி உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஏழுமலை மேல் சிகிச்சைகாக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.