நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! பனையூர் அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனைதவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!
/

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

ஆம்பூா் அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

Updated On :1 மே 2026, 12:02 am IST

ஆம்பூா் அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மாதனூா் ஒன்றியம் வெங்கடசமுத்திரம் ஊராட்சி கோவிந்தாபுரம் பகுதியை சோ்ந்த சக்திவேல் மனைவி ராஜம்மாள் (70). இவா் தனது விவசாய நிலத்தில் உள்ள தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்த தென்னை ஓலைகளை சேகரிக்கும் வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது அறுந்து கீழே விழுந்து கிடந்த மின்கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

உமா்ஆபாத் போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.