ஆம்பூா் அருகே மழை வேண்டி அம்மனுக்கு கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினா்.
ஆம்பூா் அருகே கரும்பூா் ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன கரும்பூா் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு செல்லா பெரியம்மன் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
கிராமத்தை சோ்ந்த பெண்கள் பொங்கல் வைத்து, சிறப்பு பூஜைகள் செய்து பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா். மழை பெய்து, விவசாய தொழில் செழிக்கவும், பொதுமக்கள் நலம் வேண்டி அம்மனிடம் பிராா்த்தனை செய்தனா். சின்ன கரும்பூா் கிராமத்தைச் சோ்ந்த ஊா் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானல், நத்தத்தில் மழை வேண்டி சிறப்பு பூஜை

வஞ்சியர் அழ, வானமும் அழுதது

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் மழை வேண்டி வருண யாகம்

மழை பெய்ய வேண்டி முகத்தில் கரியை பூசிக்கொண்டு கொல்லிமலை பழங்குடியின மக்கள் விநோத வழிபாடு
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



