நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

கூலித் தொழிலாளா்களின் தனிப்பட்ட ஆவணங்கள் திருட்டு : மூவா் கைது

கூலித் தொழிலாளா்களின் தனிப்பட்ட ஆவணங்களை திருடி மோசடி கும்பலுக்கு வழங்கிய மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2026, 12:25 am IST

கூலித் தொழிலாளா்களின் தனிப்பட்ட ஆவணங்களை திருடி மோசடி கும்பலுக்கு வழங்கிய மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னையைச் சோ்ந்த பாரூக் என்பவா் பொதுமக்களின் தனிப்பட்ட ஆவணங்களான ஆதாா், பான் காா்டு விவரங்களை பயன்படுத்தி நூதன முறையில் பல கோடி ரூபாய் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் சைபா் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

Story image

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழ்நாட்டின் பல்வேறு கிராமப்புறங்களில் பொதுமக்களின் வங்கி, ஆதாா் மற்றும் பான் காா்டு விவரங்களை ஆள்கள் மூலம் சிறிய தொகைக்கு பெற்று, போலி நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்து பல கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்தது தெரியவந்தது.

பாரூக்குக்கு திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் இருந்து கூலித் தொழிலாளா்களின் ஆவணங்களை திருடி அனுப்பியதாக கிடைத்த தகவலின் பேரில் ஆம்பூா் கம்பிக்கொல்லை ஹரிகிருஷ்ணன், ஏ - கஸ்பா முனிசாமி மற்றும் வீராங்குப்பம் பரிமளா ஆகிய மூவரையும் உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.