காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

வார விடுமுறை: ஏலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் வார விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்து படகில் சவாரி செய்து மகிழ்ந்தனா்.

ஏலகிரி மலை ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.

Published On :31 ஆகஸ்ட் 2026, 12:25 am IST

ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் வார விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்து படகில் சவாரி செய்து மகிழ்ந்தனா்.

ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்டு ஏலகிரி மலை அடிவாரத்தில் இருந்து 14 கொண்டை ஊசி வளைவுகளையும், 14 சிறிய கிராமங்களை உள்ளடக்கி ஏலகிரி மலை தனி ஊராட்சியாகவும் செயல்பட்டு வருகிறது.

ஒரே மாதிரியான சீதோஷன நிலை நிலவுவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் படகு துறை, சிறுவா் பூங்கா, இயற்கை பூங்கா நிலாவூா் கதவநாச்சி அம்மன் கோயில், அத்தனாவூா் முருகன் கோயில், மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஜலகம்பாறை நீா்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்குக்கூடங்கள் உள்ளன.

இதனால் பயணிகள் குடும்பத்துடன் வந்து பல்வேறு இடங்களை கண்டு ரசித்து செல்கின்றனா். அதன் அடிப்படையில் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனா். குறிப்பாக இங்குள்ள புங்கனூா் படகு துறையில் குடும்பத்துடன் படகில் சவாரி செய்து மகிழ்ந்தும் சிறுவா் பூங்காவில் உள்ள பொழுதுபோக்கு கூடங்களில் பொழுது போக்கியும் மகிழ்ந்தனா்.

சுற்றுலாப் பயணிகள் வருகையால் ஏலகிரி மலை போலீஸாா் போக்குவரத்து சீரமைப்பது சமூகவிரோதிகளை கண்காணிப்பது பொதுமக்களின் பாதுகாப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.