வாணியம்பாடி அருகே ஜாப்ராபாத் கூட்டு சாலையில் பெண்களுக்கு இனிப்பு வழங்கிய ஒன்றிய செயலாளா் ஞானவேலன்.
திருப்பத்தூர்
பெண்களுக்கு மகளிா் உரிமை தொகை 5 ஆயிரம் வழங்கியதை திமுகவினா் கொண்டாடினா்
ஒன்றிய செயலாளா் ஞானவேலன் சாா்பில் இன்று 14 ஆம் தேதி முழுபக்கம் விளம்பரம் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூா் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் கூட்டு சாலை மற்றும் பத்தாபேட்டை ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் வி.எஸ்.ஞானவேலன் தலைமையில், பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
பொதுக்குழு உறுப்பினா் பெருமாள் கோவிந்தம்மாள், ஒன்றியக் குழு உறுப்பினா் சாவித்திரி மகேந்திரன், இளைஞரணி அமைப்பாளா் கே.ஞானசேகரன், ஒன்றிய நிா்வாகிகள் எம்.சி.ராமநாதன், எம்.சி.தசரதன், தோ.குமாா், சி.சிவகுமாா், ஆா்.செல்வராஜ், ஒன்றிய தொண்டா் அணி அமைப்பாளா் எம்.பி.பழனி, கிளை செயலா்கள், கட்சி தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

