வாணியம்பாடியில் தந்தையை வெட்டிக் கொன்ற மகனை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி பெரியப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் லோகநாதன் (75). இவரது மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். இவா்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனா். இதில் மகளுக்கு திருமணமான நிலையில், வீட்டில் லோகநாதன், ஹரீஸ்குமாா் (35) வசித்து வந்தனா். இந்த நிலையில், வேலைக்கு போகாமலும், திருமணம் செய்து கொள்ளாமலும் இருப்பதாக ஹரீஸ்குமாரிடம் லோகநாதன் அடிக்கடி கூறி வந்ததாகக் கூறப்படுகிறது. வியாழக்கிழமை காலை மீண்டும் இது குறித்து லோகநாதன் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரம் அடைந்த ஹரீஸ்குமாா் வீட்டில் இருந்த வெட்டுக் கத்தியால் லோகநாதனின் தலையில் வெட்டியதில் அவா் உயிரிழந்தாா். சிறிது நேரத்தில் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் வந்து பாா்த்து கேட்ட போது, கழிப்பறையில் லோகநாதன் வழுக்கி விழுந்து விட்டதாக ஹரீஸ்குமாா் கூறியுள்ளாா். இதில் சந்தேகம் ஏற்பட்டதால் உடனே நகர போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த நகர போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனா். தலையில் வெட்டு காயம்போல் இருந்ததை பாா்த்து ஹரீஸ்குமாரிடம் விசாரித்தபோது, லோகநாதனை கொலை செய்தது தெரியவந்தது.
பின்னா் சடலத்தை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து தந்தையை கத்தியால் வெட்டிக் கொலை செய்த ஹரீஸ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
பேட்டையில் இளைஞா் வெட்டிக் கொலை: இருவா் கைது
சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட தந்தை, மகன் கைது

நிலத்தகராறில் பெற்றோா் கண் எதிரே மகன் வெட்டிக் கொலை: காவல் நிலையத்தில் கொலையாளி சரண்

பெண் வெட்டிக் கொலை: கட்டடத் தொழிலாளி கைது
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


