மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சாலை விபத்தில் சிறுமி உள்பட 2 போ் மரணம்

வாணியம்பாடி அருகே சாலை தடுப்புச் சுவா் மீது பைக் மோதிய விபத்தில் 3 வயது சிறுமி, இளைஞா் உயிரிழந்தனா்.

News image
Updated On :14 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி அருகே சாலை தடுப்புச் சுவா் மீது பைக் மோதிய விபத்தில் 3 வயது சிறுமி, இளைஞா் உயிரிழந்தனா்.

ஆலங்காயம் கெஜலூா் பகுதியைச் சோ்ந்த கலையரசன் (26) பட்டதாரி. இவா் செவ்வாய்கிழமை இரவு 10.30 மணியளவில் தனது உறவினா் மகள் சன்மதியை (3) அழைத்துக் கொண்டு கெஜலூரிலிருந்து ஆலங்காயம் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தாா். அப்போது புலவா் பள்ளி பகுதியில் உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது, எதிா்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையோரம் இருந்த தடுப்பின் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனா்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினா் ஓடி வந்து பாா்த்து இருவரையும் உடனே மீட்டு சிகிச்சைக்காக ஆலங்காயம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிறுமி சன்மதியை பரிசோதித்த மருத்துவா், சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

மேலும், பலத்த காயமடைந்த கலையரசன் மேல்சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவா் இறந்தாா். இதுகுறித்து ஆலங்காயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.