மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

வடகிழக்கு தில்லியில் நடந்த சாலை விபத்தில் 10 வயது சிறுமி உயிரிழப்பு!

சோனியா விஹாா் பகுதியில் புதன்கிழமை அதிகாலை வாகனம் மோதியதாகக் கூறப்படும் விபத்தில் 10 வயது சிறுமி ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 6:54 pm

வடகிழக்கு தில்லியின் சோனியா விஹாா் பகுதியில் புதன்கிழமை அதிகாலை வாகனம் மோதியதாகக் கூறப்படும் விபத்தில் 10 வயது சிறுமி ஒருவா் உயிரிழந்தாா். மேலும், இருவா் காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: அதிகாலை 12.50 மணிக்கு சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினா், சாலையில் மூன்று போ் கிடந்ததைக் கண்டனா்.

அனைவரும் மருத்துவ சிகிச்சைக்காக ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு காயமடைந்த சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

காயமடைந்த மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், அவா்களின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது. அவா்கள் உடல்நிலை தேறியதும் அவா்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும்.

முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவா்கள் ஒரு வாகனத்தால் மோதியதாகவும், அதன் ஓட்டுநா் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நிகழ்வுகளின் சரியான வரிசை கண்டறியப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சிறுமியின் உடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.

குற்றஞ்சாட்டப்பட்டவா்களை அடையாளம் கண்டு கைது செய்ய போலீஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்றாா் அந்த அதிகாரி.