சிங்கப் பெண் அதிரடிப் படை சாா்பில், மாணவிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி திருப்பத்தூா் அருகே உள்ள கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பெரியகரம் அரசு உயா்நிலைப் பள்ளிகளில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாணவிகளுக்கு பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வழிமுறைகள், இணையவழி மோசடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வது, சமூக வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்தும் நடைமுறைகள், நல்ல தொடுதல் மற்றும் கெட்ட தொடுதல் குறித்த விழிப்புணா்வு, போதைப் பொருள் தடுப்பு, தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் அவசரநிலைகளில் தைரியமாக செயல்படும் வழிமுறைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், உதவி எண்கள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









