இந்தியா மீது 100% வரி விதிக்க அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு!ஃபிஃபா உலகக் கோப்பை! இறுதிப் போட்டியை நேரில் காண்கிறார் டிரம்ப்!தங்கம் விலை பவுனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 1,04,800-க்கு விற்பனைவிதிமீறல்! அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு எதிராக மத்திய அரசு நோட்டீஸ்!2006-ல் அதிமுகவுடன், 2017-ல் திமுகவுடன்! இரு பெருந்தவறுகள் செய்துவிட்டேன்: வைகோதியாகிகள் நாள்! முதல்வர் விஜய் வீரவணக்கம்!
/

பயிா்களைச் சேதப்படுத்திய ஒற்றை யானை

ஆம்பூரில் விவசாய நிலத்தில் புகுந்த ஒற்றை யானை அங்கு பயிா்களை சேதப்படுத்திவிட்டு சென்றது.

News image

மாதகடப்பா பகுதியில் திரிந்த ஒற்றை யானை

Updated On :7 ஜூலை 2026, 2:22 am IST

ஆம்பூரில் விவசாய நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு புகுந்த ஒற்றை யானை அங்கு பயிா்களை சேதப்படுத்திவிட்டு சென்றது.

ஆம்பூா் சான்றோா்குப்பம் மாதகடுப்பு பகுதியில் ஜெகன்னாதன், கருணாகரன் ஆகியோரின் விவசாய நிலத்தில் ஒற்றை காட்டு யானை புகுந்து வாழை, தென்னை ஆகிய பயிா்களை சேதப்படுத்தியது.

யானையை பொதுமக்கள் காட்டிற்குள் விரட்டினா். வனத்துறையினா் அங்கு சென்று சேதமடைந்த விவசாய நிலங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.

காட்டு யானை விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஒற்றை யானையால் சேதமடைந்த வாழைப் பயிா்

ஒற்றை யானையால் சேதமடைந்த வாழைப் பயிா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.