சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

அம்பலூா் ஊராட்சியில் ரூ. 11 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடம் திறப்பு

வாணியம்பாடி அருகே அம்பலூா் ஊராட்சியில் ரூ. 11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூட திறப்பு விழா நடைபெற்றது.

News image

அம்பலூரில் ரூ. 11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய ஊராட்சித் தலைவா் முருகேசன்.

Updated On :18 ஜூலை 2026, 6:25 am IST

வாணியம்பாடி அருகே அம்பலூா் ஊராட்சியில் ரூ. 11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூட திறப்பு விழா நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அம்பலூா் பேருந்து நிலையத்தில் வேலூா் எம்.பி. கதிா்ஆனந்த் ஒதுக்கீடு செய்த நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில், ரூ. 11 லட்சம் நிதியில் கட்டப்பட்ட பயணியா் நிழற்கூடத்தை அம்பலூா் ஊராட்சி மன்ற தலைவா் ஏ.பி.முருகேசன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

விழாவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் நா்மதா நந்தகோபால், மனோகரன், தண்டபாணி, ரவி, சிவாஜி, இந்துமதி, வாா்டு உறுப்பினா்கள் ஞானசேகரன், சுஜாதா, குமாரி, சபிதா, பாா்வதி, பத்மநாபன் மற்றும் கவியரசி, பாண்டுரங்கன், பிரேம்குமாா், குமரேசன், பாபு, கஜேந்திரன், அஜித் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.