மாதனூா் ஒன்றியக்குழு சாதாரணக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாதனூா் ஒன்றியக்குழு கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றியக்குழு துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். மகராசி முன்னிலை வகித்தாா்.
ஒன்றியக்குழு உறுப்பினா்கள் தே. ரவிகுமாா், ஆா். மகாதேவன், ர. ராஜேந்திரன், மு. சம்பங்கி, தீபா ராஜன் பாபு, ஜவகா் காா்த்திக், ஜெயந்தி கோபிநாத், காா்த்திக், திருகுமரன், செந்தில்குமாா், முத்து, மனோரஞ்சிதம், கன்னியப்பன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் ரூ.1.12 கோடியில் சாலை, குடிநீா் பைப்பைலன், சாலை தடுப்புச் சுவா் அமைக்கவும், ரூ.86.72 லட்சத்தில் குடிநீா் பைப்லைன், பேவா் பிளாக் சாலை, கழிவுநீா் கால்வாய், பள்ளி சுற்றுசுவா் அமைத்தல் பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோர அனுமதி வழங்கி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










