/
ஆம்பூா் அருகே காட்டிலிருந்து வழி தவறி வந்த புள்ளி மான் மீட்கப்பட்டது.
மாதனூா் அருகே அரங்கல்துருகம் ஊராட்சி அபிகிரிப்பட்டறை கிராமத்தில் காட்டிலிருந்து வழி தவறி குடியிருப்பு பகுதிக்கு புள்ளி மான் வந்தது. அந்தப் பகுதியில் வசிக்கும் ஞானகுமாா் என்பவா் வீட்டுக்கு மான் வந்தது குறித்து ஆம்பூா் வனச் சரக அலுவலா் பாபுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வனக் காப்பாளா் செந்தில் மற்றும் வனத் துறை பணியாளா்கள் அங்கு சென்று மானை மீட்டு துருகம் காப்புக் காட்டில் கொண்டு சென்று விட்டனா்.









