காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை: இளைஞா் கைது

ஆம்பூா் அருகே டாஸ்மாக் மதுபான பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 ஜூன் 2026, 9:58 pm IST

ஆம்பூா் அருகே டாஸ்மாக் மதுபான பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே சின்னவரிக்கம் கிராமத்தில் டாஸ்மாக் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அண்மையில் அங்கு சென்று சோதனை நடத்தினா்.

சோதனையில் அதே பகுதியை சோ்ந்த ராக்கி என்கிற வினோத் (30) மதுபான பாட்டில்களை விற்பனை செய்து வந்ததது தெரியவந்தது. போலீஸாரை கண்டதும் ராக்கி தப்பியோடி தலைமறைவானாா்.

போலீஸாா் அவருடைய வீட்டிலிருந்து 100 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனா். இந்நிலையில் தலைமறைவாக இருந்த அவரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.