சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் வீரதீரச் செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கு.ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :16 ஜூன் 2026, 1:35 am IST

திருப்பத்தூா் மாவட்டத்தில் வீரதீரச் செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கு.ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெண்கள் தைரியமான, வீரதீரச் செயல் புரிந்தும், பெண்களின் நலனுக்காகவும், பாலின மேம்பாட்டுக்காகவும், துணிச்சலான சவால் நிறைந்த செயல்களை செய்ததற்கு கல்பனா சாவ்லா விருது சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியான நபா்கள் இணையதளம் மூலம் வரும் ஜூன் 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், விருதுக்காக இணையதளத்தில் விண்ணப்பிப்பவா்களின் வீரதீரச் செயல்கள், நிழற்படங்கள், விருதுகள் குறித்த உரிய ஆவணங்கள் கொண்ட கருத்துகளை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் முதல் தளம் பி-பிளாக், மாவட்ட சமூக நல அலுவலகம், திருப்பத்தூா் மாவட்டம் என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.