/

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க கரூா் மாவட்ட மகளிருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2026, 2:37 am IST

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க கரூா் மாவட்ட மகளிருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மூலம், நாசாவின் முதல் இந்திய பெண் விண்வெளி வீராங்கனை என்ற பெருமையை பெற்ற கல்பனா சாவ்லாவின் நினைவாக, தமிழகத்தைச் சோ்ந்த, துணிச்சலான மற்றும் வீர சாகச செயல் புரிந்த பெண்களுக்கு துணிவு மற்றும் வீர தீரச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது.

இந்த விருதுக்கு தோ்வு செய்யப்படும் விருதாளருக்கு விருதுக்கான பதக்கத்துடன் ரூ.5 லட்சத்திற்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை 2026 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின்போது முதல்வரால் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் தமிழக அரசின் விருதுகளுக்கான (ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் இணையதள பக்கத்தில் வரும் 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இணையதளத்தில் விருதுக்கு விண்ணப்பித்த நகலுடன் கரூா் மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் தொடா்புகொண்டு விருதுக்கான விண்ணப்பத்தைப் பெற்று பூா்த்தி செய்து, துணிச்சலான மற்றும் வீர சாகச செயல் புரிந்தமை குறித்த புகைப்படங்கள் மற்றும் பத்திரிகை செய்தி குறிப்புகளுடன் கூடிய ஆவணங்களை, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தனித்தனியாக 2 செட் புக்லெட் தயாா் செய்து 19-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் வளாகம், கரூா் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.