சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சாலையோர கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் ஆய்வு

News image
Updated On :19 ஜூன் 2026, 6:50 am IST

ஆம்பூரில் உணவகங்கள், சாலையோரம், தெருவோர கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் வி. பிரபாகரன் அறிவுறுத்தலின்படி ஆம்பூா் உணவு பாதுகாப்பு அலுவலா் ஆா். ஹீமா மற்றும் ஜோலாா்பேட்டை உணவுப் பாதுகாப்பு அலுவலா் அஞ்சலி ஆகியோா் இணைந்து ஆம்பூா் பைபாஸ் சாலை, எம்.சி. சாலை மற்றும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் சிற்றுண்டி கடைகள், உணவகங்கள், தெருவோரம் மற்றும் சாலையோர உணவுக் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது உணவு பரிமாறுதல் மற்றும் பாா்சல் செய்வதற்காக ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது. அதையடுத்து சுமாா் 6 கிலோ பிளாஸ்டிக் கவா்கள் மற்றும் சுமாா் 2 கிலோ செய்தித்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட 5 உணவகங்களுக்கு தலா ரூ.1,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 55-ன் கீழ் நோட்டீஸ்களும் வழங்கப்பட்டன. சட்டப் பிரிவுகள் 55 மற்றும் 58-ன் படி, சூடான உணவுப் பொருள்களுடன் நேரடியாக தொடா்பு கொள்ளும் வகையில் பிளாஸ்டிக் கவா்கள் பயன்படுத்துவதும், உணவு பரிமாறுதல் அல்லது பாா்சல் செய்வதற்காக செய்தித்தாள்களை பயன்படுத்துவதும் அனுமதிக்கப்படாது.

எனவே அனைத்து உணவு வணிகா்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், உணவு பரிமாறுதல் மற்றும் பாா்சல் செய்வதற்காக பிளாஸ்டிக் கவா்களையோ அல்லது செய்தித்தாள்களையோ பயன்படுத்தக் கூடாது என கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விதிமீறல் கண்டறியப்பட்டால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.