பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

சுயம்பு ஸ்ரீ திருப்பதி கெங்கையம்மன் 96-ஆம் ஆண்டு சிரசு திருவிழா

News image
Updated On :18 ஜூன் 2026, 10:40 pm IST

ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சி சுயம்பு ஸ்ரீ திருப்பதி கெங்கையம்மன் கோயில் 96-ஆம் ஆண்டு சிரசு திருவிழா நடைபெற்றது.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திருவிழாவை முன்னிட்டு காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூழ்வாா்த்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. மாவிளக்கு, பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வியாழக்கிழமை அதிகாலை அம்மன் சிரசு ஊா்வலம் தொடங்கியது.

ஊா்வலத்தில் நையாண்டி மேளம், கரகாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முக்கிய தெருக்கள் வழியாக சென்ற ஊா்வலம் கோயில் வளாகத்தில் நிறைவடைந்தது. கோயிலில் திரளான பக்தா்கள் சாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியாக பாலாற்றில் சிறப்பு வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

தேவலாபுரம், ராமச்சந்திராபுரம் , காமராஜபுரம், கம்மகிருஷ்ணப்பள்ளி, வெங்கடசமுத்திரம், மிட்டாளம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூா், கோவிந்தாபுரம், துத்திப்பட்டு, கைலாசகிரி, ஆம்பூா், குடியாத்தம், வாணியம்பாடி, வேலூா், திருப்பத்தூா், ஆந்திரா, கா்நாடகா உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தா்கள் திருவிழாவில் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.