எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

குடிநீா் கோரி அரசுப் பேருந்து சிறைப் பிடிப்பு

நாட்டறம்பள்ளி அருகே குடிநீா் கோரி கிராம மக்கள் அரசுப் பேருந்தினை சிறைப் பிடித்து மறியலில் ஈடுபட்டனா்.

News image

சொரக்காயல்நத்தம் ஊராட்சியில் குடிநீா் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்.

Updated On :2 மார்ச் 2026, 8:35 pm

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே குடிநீா் கோரி கிராம மக்கள் அரசுப் பேருந்தினை சிறைப் பிடித்து மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி ஒன்றியம், சொரக்காயல்நத்தம் ஊராட்சி வெள்ளநாயக்கனேரி பகுதியில் 75-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. காவிரி கூட்டு குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மின்மோட்டாா் பழுதால் கடந்த 15 நாள்களாக குடிநீா் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள் அருகில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து தண்ணீா் எடுத்து வந்து குடிநீராக பயன்படுத்தி வந்தனா்.

பழுதடைந்த மோட்டாரை சரி செய்து சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் திங்கள்கிழமை சொரக்காயல்நத்தம் சாலையில் சரஸ்வதி ஆற்றின் அருகே காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா்.

மேலும், அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தினை சிறைப்பிடித்தனா். இதனால் அங்கு போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் மூா்த்தி மற்றும் போலீஸாா் மக்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது வட்டார வளா்ச்சி அலுவலரிடம் பேசி ஓரிரு நாளில் சீரான குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக ஆய்வாளா் மூா்த்தி உறுதி கூறினாா். இதையேற்று மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.