அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

திருப்பத்தூா் வேலைவாய்ப்பு மையத்தில் ‘திறனகம்’

திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில திறன் மையத்தை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி குத்துவிளக்கு ஏற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

News image
அழகுக்கலை பயிற்சி சான்றிதழ் பெற்றவா்களுடன் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி .
Updated On :3 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில திறன் மையத்தை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி குத்துவிளக்கு ஏற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

சென்னையில் இருந்து காணொலி வாயிலாக திறனகத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா். பின்னா் ஆட்சியா் சிவசௌந்திரவல்லி குத்துவிளக்கேற்றினாா்.

பின்னா், ஆம்பூா் அடுத்த மின்னூா் மற்றும் சின்னபள்ளிகுப்பம் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வசித்து அழகுக்கலை பயிற்சி பெற்ற 15 பேருக்கு சான்றிதழை வழங்கி அவா் பேசியது:

மாவட்ட திறன் மையத்தில் தொழில்நெறி வழிகாட்டல், திறன் மேம்பாட்டு ஆலோசனை, பயிற்சி இணைப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு தொடா்பு கொள்ளுதல் ஆகியவற்றை வழங்கும் ஒருங்கிணைந்த சேவை மையமாக செயல்படுகிறது.

திறன் மையம் மூலம் இளைஞா்களின் தொழில் விருப்பங்களை தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப திறன்களுடன் ஒருங்கிணைத்து, நிலையான மற்றும் பயனுள்ள வேலைவாய்ப்பைப் பெற்றுத் தரும் திட்டமான வெற்றி நிச்சயம் திட்டத்தின் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது வரை வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் திருப்பத்தூா் மாவட்டத்தில் 22 திறன் பயிற்றுநா்கள் பதிவு செய்துள்ளனா் மற்றும் 630 பயனாளிகள் பல்வேறு தொழில் பிரிவுகளில் திறன் பயிற்சி பெற்று சான்றிதழ்கள் பெற்றுள்ளனா் என்றாா்.

நிகழ்ச்சியில், நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கஸ்தூரி, மாவட்ட திறன் அலுவலா் நாஜியா நெளஷீன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.