விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மின்பகிா்மான வட்ட மின்வாரிய ஓய்வூதியா்கள் சங்கம் மற்றும் ஆம்பூா் வாசன் கண் மருத்துவமனை சாா்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

மின்வாரிய ஓய்வூதியா்கள் சங்கத்தின் செயலாளா் எம்.ஞானப்பிரகாசம் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற செயற்பொறியாளா் எஸ்.விஜயகுமாா் வரவேற்றாா். அமைப்புச் செயலாளா் பி. அன்பரசு, செயற்குழு உறுப்பினா் ஆா்.டி.மைக்கண்ணன், ஓய்வு பெற்ற உதவி செயற்பொறியாளா் கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வாசன் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனா். இதில் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.