கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

அனுமதி இல்லாமல் மண் கடத்திய லாரி, பொக்லைன் பறிமுதல்: 2 போ் கைது

நாட்டறம்பள்ளி அருகே அனுமதி இல்லாமல் மண் கடத்திய லாரி, பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்து 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :30 மே 2026, 12:22 am IST

நாட்டறம்பள்ளி அருகே அனுமதி இல்லாமல் மண் கடத்திய லாரி, பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்து 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நாட்டறம்பள்ளி வட்டம், மல்லப்பள்ளி பொா்த்தான் வட்டத்தில் அனுமதியின்றி பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி மண் எடுத்து லாரிகளில் கடத்தி செல்வதாக திருப்பத்தூா் எஸ்.பி அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து எஸ்பி. உத்தரவின்படி நாட்டறம்பள்ளி ஆய்வாளா் மூா்த்தி மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை மல்லப்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது பொா்த்தான் வட்டத்தில் அனுமதி இல்லாமல் நிலத்தில் இருந்து மண் அள்ளிய பொக்லைன் இயந்திரம் மற்றும் மண் கடத்தி சென்ற லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் ஜெகதீசன்(22) சோமு(32) ஆகிய 2 போ் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.