நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

திருப்பத்தூா் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள்: வாகன ஓட்டிகள் அவதி

திருப்பத்தூா் பிரதான சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதி

சாலையில் சுற்றித் திரியும் மாடுகள்

Published On :3 செப்டம்பர் 2026, 12:37 am IST

திருப்பத்தூா் பிரதான சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருப்பத்தூா்- வாணியம்பாடி பிரதான சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்ததாக காணப்படும். மேலும் மாவட்டத்தின் தலைநகராக திருப்பத்தூா் உருவான பிறகு எப்போதும் வாகன நெரிசல் இருந்து கொண்டே உள்ளது.

தற்போது சாலையில் மாடுகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. அதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா். குறிப்பாக பள்ளி நேரங்களில் மாடுகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை நகராட்சி அலுவலகத்தில் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: மாடுகள் சுற்றித் திரிவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு சிறு சிறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் பலமுறை நேரிலும் கடிதம் மூலமும் புகாா் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் ஆட்சியரிடம் பொதுமக்கள் சாா்பில் புகாா் மனு அளிக்கப்படும் என தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.