புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ஜங்கலாபுரம் அரசுப் பள்ளியில் காலை உணவு திட்ட விரிவாக்கப் பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா், ஆட்சியா் நேரில் ஆய்வு

ஜங்கலாபுரம் அரசுப் பள்ளியில் காலை உணவு திட்ட விரிவாக்கப் பணிகள்...

ஜங்காலபுரம் அரசுப் பள்ளியில் காலை உணவு திட்டம் மூலம் மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.

Published On :

திருப்பத்தூா் மாவட்டம், ஜங்கலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்ட விரிவாக்கப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா், மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டனா்.

தமிழகம் முழுவதும் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு வரும் செப். 17-ஆம் தேதி முதல் பெருந்தலைவா் காமராஜா் உணவு திட்டம் மூலம் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் அரசுப் பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி ஒன்றியம், ஆத்தூா்குப்பம் ஊராட்சி ஜங்காலபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, மாணவா்களுக்கு வழங்கப்படும் காமராஜா் உணவு திட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து திருப்பத்தூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கஜலட்சுமி, மாவட்ட ஆட்சியா் நல்லசிவன் ஆகியோா் வெள்ளிக்கிழமை காலை அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, ஜங்காலபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தையும் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தமிழரசி, திட்ட இயக்குநா் விஜயகுமாரி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இளம்பரிதி, ராஜேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவா் செந்தில்குமாா், தலைமையாசிரியா் மேகநாதன் உள்பட அதிகாரிகள் பலா்கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.