ஆவடி வேல்டெக் கல்லூரியின் 15-வது பட்டமளிப்பு விழா மற்றும் நிறுவனத் தலைவர் ரங்கராஜனின் சுயசரிதைப் புத்தக வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் கல்லூரியின் துணைத்தலைவர் சகுந்தரா ரங்கராஜன், அறங்காவலர் குழுத் தலைவர் ரங்கராஜன் மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேல்டெக் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர்.பி.பாஜ்பாய் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக ஆளுநர் ரோசய்யா பங்கேற்று ரங்கராஜனின் சுயசரிதை புத்தகத்தை வெளி
யிட்டார்.
இதனைத்தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத் தேர்வில் சிறந்து விளங்கிய 17 மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்களும், 550 மாணவர்களுக்கு பட்டங்களையும் அவர் வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெலுங்கில் மட்டுமே 15 கோடி பார்வைகள், 16 லட்சம் லைக்குகள் பெற்ற நானியின் பாடல்!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
‘க்வாட்’ கூட்டமைப்பு வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம்: சீனா எதிர்வினை!

பெரும் கவலையளிக்கிறது! தொண்டர்களுக்கு திருமா வேண்டுகோள்! | VCK
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


