அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

இளைஞர்கள் பயன்பெறும் நோக்கத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறை  வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை 

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

இளைஞர்கள் பயன்பெறும் நோக்கத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறை  வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 16) நடத்தப்பட உள்ளதாக வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) சீனிவாசன்  தெரிவித்துள்ளார். 
     இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் நோக்கத்தில் மாவட்டந்தோறும் உள்ள வேலைவாய்ப்பு  அலுவலகங்களில் வாரந்தோறும் குறிப்பிட்ட நாளில்  தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 16) சிறு அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சிக்கான ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
  இதில் பிரசித்தி பெற்ற தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். அதனால், இந்த முகாமில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் பட்டயப் படிப்பு முடித்தோர் பங்கேற்கலாம். எனவே, கல்வித் தகுதியும், விருப்பமும் உள்ளோர் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். 
இந்த முகாமில் கலந்து கொண்டு பணிநியமனம் பெறுவோர்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.