கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கோயில் குளத்தை மண் கொட்டி மூடியதாக 2 பேர் கைது

புழல் அருகே, கோயில் குளத்தை மண் கொட்டி ஆக்கிரமிப்பு செய்ததாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர். 

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 10:52 pm

DIN

புழல் அருகே, கோயில் குளத்தை மண் கொட்டி ஆக்கிரமிப்பு செய்ததாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர். 
சென்னை புழலில் 22 ஆவது வார்டு சிவராஜ் தெருவில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கரியமாணிக்க பெருமாள் கோயில் உள்ளது.
இந்த கோயிலுக்குச் சொந்தமான குளம் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ளது. 
நீண்ட காலமாக இக்குளம் பராமரிப்பின்றி கிடந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவோடு இரவாக சிலர் குளத்தில் மண்போட்டு மூடி, குளம் இருந்த சுவடு தெரியாமல் மறைத்து விட்டார்களாம். 
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை கோயிலுக்கு வந்த பக்தர்கள் குளத்தில் மண் நிரப்பியுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சென்னை - பாடியிலுள்ள அறநிலையத்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, அறநிலையத்துறை நிர்வாக அலுவலர் குமரேசன், மாதவரம் துணை வட்டாட்சியர் சுப்பிரமணி, வருவாய் ஆய்வாளர் கார்த்திக் ஆகியோர் வரைபடங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். 
இதில், குளத்தை ஆக்கிரமிப்பு செய்தது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து, அறநிலையத்துறையினர் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில், ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. 
தொடர்ந்து, குளப்பகுதியில் யாரும் நுழையாதவாறு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இதேபோல், இப்பகுதியில் உள்ள இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான திருமூல நாதசுவாமி கோயில் மற்றும் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடம் மற்றும் குளங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவற்றைச் சீர் செய்து மழைநீரை சேமித்தால் சுற்றுப்புறங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இதனால், குடிநீர் தட்டுப்பாட்டையும் ஓரளவிற்குத் தவிர்க்கலாம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.