புழல் அருகே குடும்பத் தகராறில் பெண் தீக்குளித்தார், அவரை காப்பாற்ற முயன்ற கணவர் தீக்காயம் அடைந்தார்.
சென்னை, மாதவரத்தை அடுத்த புழல் வள்ளூவன் நகரைச் சேர்ந்தவர் இளையராஜா (36). இவர், அதே பகுதியில் வெல்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாமுண்டீஸ்வரி (30). இத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இளையராஜாவுக்கு, மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், இளையராஜா புதன்கிழமை மது அருந்திவிட்டு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த சாமுண்டீஸ்வரி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை ஊற்றித் தீக்குளித்தாராம். அவரை இளையராஜா காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் தீ பரவியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து புழல் காவல் ஆய்வாளர் நடராஜ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அட்லீ மகளின் பெயர் மியூ!

என் பெயர் எங்கப்பா? கார்த்தியைக் கிண்டலடித்த சூர்யா!

சொதப்பும் டெவால்டு பிரெவிஸ்..! கடந்த சீசனைவிட 50% குறைவான ரன்கள்!

குஜராத் டைட்டன்ஸின் தோல்விக்கு காரணம் இதுதான்; பயிற்சியாளர் கூறியதென்ன?
விடியோக்கள்

அதிமுகவை அழிக்க நினைக்கிறார் Vijay! டிடிவி தினகரன் | TVK | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

DMK - ADMK கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உதவினேனா? விமர்சனங்களுக்கு Rajinikanth பதில்!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
