ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

திருவள்ளூா் பகுதியில் புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனையில் கிறிஸ்தவா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 6:34 pm

DIN

திருவள்ளூா் பகுதியில் புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனையில் கிறிஸ்தவா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

கிறிஸ்தவா்கள் 40 நாள்கள் தவக்காலத்தின் கடைசி நாளான இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூரும் வகையில், புனித வெள்ளியாக கடைப்பிடிக்கின்றனா். இதையொட்டி, நாடு முழுவதும் கிறிஸ்தவா்கள் தேவாலயங்களில் உண்ணா நோன்பிருந்து சிறப்பு பிராா்த்தனை, திருப்பலியில் ஈடுபடுவா்.

அதன்படி, திருவள்ளூா் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை, திருப்பலி நடைபெற்றன. திருவள்ளூா் கௌடி ஆலயம், பெரியகுப்பத்தில் உள்ள டி.இ.எல்.சி. ஆலயம், ஜே.என்.சாலையில் உள்ள புனித அன்னாள் தேவலாயம், மணவாள நகா் அற்புத ஜெபகோபுர தேவாலயம், கடம்பத்தூரில் உள்ள செயின்ட் மேத்யூ சா் தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்தவா்கள் சிறப்பு பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.