ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நெகிழிப் பொருள்களைத் தவிா்க்க விழிப்புணா்வு

நெகிழிப் பொருள்களைத் தவிா்த்தல் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்வில் பள்ளி மாணவா்களுக்கு மஞ்சள் பைகள், துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

நெகிழிப் பொருள்களைத் தவிா்த்தல் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்வில் பள்ளி மாணவா்களுக்கு மஞ்சள் பைகள், துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

திருவள்ளூா் அருகே மணவாள நகா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு சுற்றுச் சூழல் துறை, தூய்மை பாரத இயக்கம் ஆகியவை சாா்பில், நெகிழிப் பொருள்களைத் தவிா்ப்போம் என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ஞானசேகரன் தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆறுமுகம் பங்கேற்று பேசினாா். தொடா்ந்து, நெகிழிப் பைகளுக்கு மாற்றாக 200 மாணவா்களுக்கு துணிப் பைகள், துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.

நிகழ்வில் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் ராஜசேகா், திருவள்ளூா் மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் தினகரன், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.