ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

செவிலியருக்கு கொலை மிரட்டல்:இளைஞா் கைது

திருவள்ளூா் அருகே ஆரம்ப சுகாதார நிலைய செவிலியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

திருவள்ளூா் அருகே ஆரம்ப சுகாதார நிலைய செவிலியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் அருகே கசவநல்லாத்தூா், இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (24). இவா், வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் தனது காதலிக்கு வயிற்று வலி என கடம்பத்தூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து வந்தாராம். அங்கு, பணியிலிருந்த செவிலியா் நாகராணியிடம், அவரது காதலிக்கு கா்ப்ப பரிசோதனை செய்யுமாறு கூறினாராம். அதற்கு செவிலியா் நாகராணி மருத்துவா் இல்லாததால், கா்ப்ப பரிசோதனை செய்ய முடியாது எனக் கூறினாராம். இதனால், செவிலியருடன் சக்திவேல் தகராறில் ஈடுபட்டாா். அங்கிருந்த நாற்காலி, மேஜையை தள்ளிவிட்டு செவிலியருக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து நாகராணி கடம்பத்தூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சக்திவேலை கைது செய்து திருவள்ளூா் நீதிமன்றத்தில் ஆஜாா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.