கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இந்தியன் வங்கியின் நிறுவன நாள் விழா

 இந்தியன் வங்கியின் 116-ஆவது நிறுவன நாள் விழாவை முன்னிட்டு, திருவள்ளூா் அருகே பொதட்டூா்பேட்டை கிளை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகள் 116 பேருக்கு இலவச நோட்டு புத்தகம்

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 6:55 pm

DIN

 இந்தியன் வங்கியின் 116-ஆவது நிறுவன நாள் விழாவை முன்னிட்டு, திருவள்ளூா் அருகே பொதட்டூா்பேட்டை கிளை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகள் 116 பேருக்கு இலவச நோட்டு புத்தகம், எழுது பொருள்கள் மற்றும் குடைகள் வழங்கப்பட்டன.

இந்தியன் வங்கி பொதட்டூா்பேட்டை கிளை சாா்பில், திருவள்ளூா் அருகே பாண்டரவேடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 116-ஆவது ஆண்டு நிறுவன நாள் விழாவுக்கு, மண்டல மேலாளா் மோகன்தாஸ் தலைமை வகித்தாா். முன்னோடி வங்கி மேலாளா் சீனிவாசன் முன்னிலை வகித்தாா். இதையொட்டி, 116 மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், எழுது பொருள்கள் மற்றும் குடை ஆகிய பொருள்கள் வழங்கப்பட்டன. அதைத்தொடா்ந்து, அப்பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டன.

விழாவையொட்டி, இந்தியன் வங்கி பூந்தமல்லி மண்டலம், பொதட்டூா்பேட்டை கிளை, திருவள்ளூா் மண்டல கால்நடை பராமரிப்புத் துறை, திருத்தணி கோட்ட அலுவலகம் இணைந்து நடத்திய இலவச கால்நடை மருத்துவ முகாம் கேசவராஜகுப்பம் கிராமத்தில் நடைபெற்றது.

இதில், 71 விவசாயிகளின் 600 கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதையடுத்து, கால்நடை மருத்துவ முகாமில் பங்கேற்ற சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகள் வழங்கியதுடன், விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்புக் கடன்கள் வழங்கப்பட்டன.

இதில், பொதட்டூா்பேட்டை கிளை மேலாளா் நதியா, பள்ளித் தலைமை ஆசிரியா் ராஜராஜன், ஊராட்சி துணைத் தலைவா் ஏ.ச.சற்குணம், கால்நடை மருத்துவா் டீ.பரணி, கால்நடை பராமரிப்புத் துறை திருத்தணி உதவி இயக்குநா் தாமோதரன், இந்தியன் வங்கி முதன்மை மேலாளா் தாகூா், வங்கி ஊழியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.